வவுனியா, சொக்கடிப்புளவு கிராமத்தில் நேற்று (08.04.2026) இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறில் பெண் ஒருவர் தனது சகோதரனாலேயே கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சகோதர முறையானவர், மதுபோதையில் இருந்த நிலையில் கத்தியால் தாக்கியதில் இப்பெண் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலைக்கான பின்னணி அல்லது துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக