BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு குடும்பத்தினர் உயிர் தப்பினர்

களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு குடும்பத்தினர் உயிர் தப்பினர்

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதியாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று மாலை கும்பல் ஒன்று புகுந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர், அவரது தாயார் மற்றும் மற்றொருவர் உள்ளிருந்த நிலையில், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

தீ விபத்தில் ஒருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயை களுத்துறை மாநகர சபை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஹெரோயின் தொடர்பான கைது நடவடிக்கைக்கு உதவியதாகக் கூறப்படும் நபரின் வீட்டுக்கே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"