BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஜீப்சைக்கிள் மோதல் விபத்து முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது

மட்டக்களப்பில் ஜீப்சைக்கிள் மோதல் விபத்து முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரித்திச்சேனை சந்தியில் விசேட அதிரடிப்படையின் (STF) ஜீப் வண்டி சைக்கிளுடன் மோதியதில் 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்லடி முகாமிலிருந்து தாண்டியடி முகாமுக்கு பயணித்த ஜீப், எதிரே வந்த சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்துக்குப் பின்னர் STF ஜீப் வண்டியை ஓட்டிய சாரதி நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுணதீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"