மொனராகலை மாவட்டம் வெல்லவாய, ஹந்தபானகல - கென்ஹத பகுதியில் நேற்று (08.04.2026) மாலை இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது, வீட்டின் அருகிலுள்ள விவசாய நிலத்தில் அவரது தாய் மற்றும் தந்தை வேலை செய்துகொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரெனப் பெய்த கடும் மழை காரணமாக, நனைந்து கொண்டிருக்கும் தனது பெற்றோருக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக அவர் வயல் வெளிக்குச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிருக்கு நேசமான பெற்றோரை மழையிலிருந்து காக்கச் சென்ற மகள், இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக