அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) மூலம் ஆரம்பமான இந்த இராணுவ நடவடிக்கையில், தற்போது அமெரிக்காவின் F-15E Strike Eagle மற்றும் A-10 Warthog ஆகிய விமானங்கள் ஈரானியப் படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, போரின் ஆரம்பக் கட்டத்தில் குவைத் வான் பாதுகாப்புப் படையினரின் தவறான இலக்கு நிர்ணயிப்பால் 3 அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈரானின் நேரடித் தாக்குதல்கள் அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் கேந்திர மையமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளமை சர்வதேச சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மீண்டும் திறக்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த ஏப்ரல் 7ஆம் திகதி (நேற்று நள்ளிரவு) காலக்கெடுவை ஈரான் உதாசீனம் செய்துள்ளது. இதனால், பென்டகன் தரப்பிலிருந்து அடுத்தகட்ட பாரிய தாக்குதல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதுடன், வளைகுடா பிராந்தியத்தில் முழு அளவிலான போர் வெடிக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே மேலோங்கியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக