வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தினால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) ஏற்றுக்கொள்ளத் தமக்குத் தடையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக அடுத்த இரண்டு வார காலத்திற்குப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விடுத்திருந்த இரண்டு வார காலக்கெடுவிற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து, தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டு இந்தச் சுமுகமான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் அராக்சி வலியுறுத்தியுள்ளார். பென்டகன் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானிடம் இருந்து வந்துள்ள இந்தச் சாதகமான சமிக்ஞை, தற்காலிகமாகப் போர் பதற்றத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக