BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கை: தேசிய கொடுப்பனவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி வங்கிப் பிரதானிகளுடன் சந்திப்பு!

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கை: தேசிய கொடுப்பனவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி வங்கிப் பிரதானிகளுடன் சந்திப்பு!

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வங்கிப் பிரதானிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார். பணப் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களைப் பொதுமக்களிடையே கொண்டு செல்வதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உள்ள பாரிய பொறுப்பை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். இந்த முறையைப் பொதுமக்களுக்கு மிகவும் வசதியானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுவதற்கு வங்கி முறைமை வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களைக் களைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் ஊடாகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வது வங்கி முறைமைக்கு அதிக செலவை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். புதிய QR கொடுக்கல் வாங்கல் முறைக்கு மாறுவதன் மூலம் இச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும், இது பொதுமக்களுக்கு வினைத்திறனான மற்றும் பாதுகாப்பான வழிமுறையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். வங்கித்துறை சார்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கியின் பதில் பொது மேலாளர் வை. ஏ. ஜயதிலக, அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு வங்கி முறைமை முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லத் தயார் என்றும் உறுதி அளித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"