தனமல்வில, குடா ஓயா பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 49 வயதுடைய நபர் ஒருவரை, எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதவான் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (04.04.2026) உத்தரவிட்டுள்ளது. குடா ஓயா, பலஹருவ வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தனமல்வில தலைமையக பொலிஸில் அளித்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் அப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனமல்வில தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டாரவின் வழிகாட்டலில், பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக