வத்தளை, மபோலா, துவவத்த பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் மெழுகுத் துணி உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று (06.04.2026) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, கொழும்பு தீயணைப்புத் திணைக்களம் விரைந்து செயற்பட்டு, தீயை அணைக்கும் பணிகளுக்காக 3 தீயணைப்பு வாகனங்களையும் 13 அதிகாரிகளையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.
தொழிற்சாலையில் பிளாஸ்டிக் மற்றும் மெழுகு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நிலவுகின்றன. தற்போது வரை தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இவ்விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக