BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

யாழ். இந்துவின் வைரமணி உதிர்ந்தது: கணிதப் பிரிவில் பெற்று சாதித்த மாணவன் அக்சயன் காலமானார்

யாழ். இந்துவின் வைரமணி உதிர்ந்தது: கணிதப் பிரிவில் பெற்று சாதித்த மாணவன் அக்சயன் காலமானார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மற்றுமொரு கல்விச் சாதனையாளரான லவன் அக்சயன் என்ற மாணவனின் மறைவு, யாழ். கல்விச் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், அண்மையில் வெளியான 2025-ஆம் ஆண்டுக்கான (2026-இல் நடைபெற்ற) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி, மூன்று பாடங்களிலும் 'A' (3A) அதி உயர் சித்திகளைப் பெற்றிருந்தார். இதன் மூலம் யாழ். மாவட்ட ரீதியில் 24-வது இடத்தைப் பிடித்து, பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றிருந்தார்.


வெற்றிச் செய்தியைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று (04.04.2026) உயிரிழந்துள்ளார். சாதனை மாணவனின் இந்த அகால மரணம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இணுவில் பிரதேச மக்கள் என அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருந்த இளம் திறமையாளரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"