மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவில் உள்ள ஆற்றங்கரை வீதி, புச்சாக்கேணி பகுதியில் நேற்று (30.03.2026) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து, தாயாருடன் வசித்து வந்த 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார். தோணிதாட்ட மடு பகுதியில் வசித்து வந்த கணவர், தனது மனைவியைப் பழிவாங்கும் நோக்குடன் கட்டுத் துப்பாக்கியுடன் வந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, தாக்குதலுக்குப் பயன்படுத்திய துப்பாக்கியுடன் தப்பியோடியுள்ள கணவரைக் கைது செய்ய வாகரை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக