BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிலாபத்தில் வளைவில் மோதி விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் கார்!

சிலாபத்தில் வளைவில் மோதி விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் கார்!

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று, சிலாபம் - பண்டாரவத்தை வளைவுப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (29.03.2026) இரவு சுமார் 11.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதில் ஒன்றில் பலமாக மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காரின் முன்பகுதி மற்றும் மதில் ஆகியன பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்து நடந்த சமயம் காரில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்துள்ளார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் அவருக்குப் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரத்தில் ஏற்பட்ட கவனக்குறைவு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்துச் சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"