மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான நேரடி மோதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இன்று காலை ஆசிய வர்த்தக நேரத்தின்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் (Brent Crude) விலை 2.9% அதிகரித்து, ஒரு பேரல் 115.84 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்னர் (பெப்ரவரி 28-க்கு முன்) வெறும் 72 டொலராக இருந்த விலை, தற்போது குறுகிய காலத்தில் வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடான போக்குவரத்துத் தடைகள் மற்றும் ஈரானின் எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீதான தாக்குதல்கள் விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதித்துள்ளன. இந்தத் திடீர் விலை உயர்வு இலங்கையைப் போன்ற இறக்குமதி நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையில் ஏற்கனவே கடந்த வாரத்தில் (மார்ச் 22) எரிபொருள் விலைகள் 25% வரை உயர்த்தப்பட்ட நிலையில், உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மீண்டும் ஒரு விலையேற்றத்திற்கு வழிவகுக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக