மத்திய கிழக்கு போர்க்களத்தில் இதுவரை கண்டிராத வகையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) பாரிய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஒன்றிணைந்து, 120-க்கும் அதிகமான அதிநவீன ஏவுகணைகளை வீசி ஈரானின் முக்கிய இராணுவ மையங்களை இலக்கு வைத்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானின் நீண்டதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான முக்கிய பாகங்களை உற்பத்தி செய்யும் தளம், IRGC-இன் ஏவுகணை ஆராய்ச்சி மையம் மற்றும் அதிநவீன ஆயுத உற்பத்தித் தளங்கள் எனப் பல முக்கிய இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் வானம் அதிரும் வகையில் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சில ஏவுகணைகளைத் தடுத்ததாகக் கூறினாலும், செயற்கைக்கோள் ஏவுகணைகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் தளங்கள் உட்படப் பல இராணுவ மையங்கள் பாரிய சேதங்களைச் சந்தித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது ஈரானின் பாதுகாப்புத் திறனுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக