தற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்போது பொதுமக்களிடம், நீரை வீணாக்காமல், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அளவுக்கு அதிகமாக நீரை பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குழாய் ஊடாக நீர் பெறும் இறுதி முனைகளில் நீரின் அழுத்தம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் வரட்சியான நிலை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இதனால், தடையின்றி நீர் விநியோகம் நடைபெற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக