சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 54.18 டொலர்கள் அதிகரித்து, 4,437.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 1.24% சதவீத வளர்ச்சியாகும். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையிலும் பலமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.48 டொலர்களால் அதிகரித்து, 69.31 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2.17% சதவீத உயர்வாகும். சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் விவகாரத்தில் எடுத்துள்ள புதிய நிலைப்பாடுகள் உலகச் சந்தையில் இந்த ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக