இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (25) வரலாறு காணாத வகையில் அதிரடி உயர்வைப் பதிவு செய்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தெரிவு செய்து வருவதால், இதற்கான கேள்வி (Demand) தீவிரமாக அதிகரித்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்றைய புதிய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரணத் தங்கமான 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமின் விலையைப் பொறுத்தவரை, 24 கரட் தங்கம் 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 45,188 ரூபாயாகவும் காணப்படுகிறது. உள்நாட்டில் நிலவும் தங்கத்திற்கான தட்டுப்பாடு மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக