அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை தள்ளிவைப்பதாக அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே எண்ணெய் சந்தையில் பெருமளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பே, சந்தையில் வர்த்தக அளவு திடீரென அதிகரித்துள்ளதாக தரவு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதனைத் தொடர்ந்து, அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சுமார் 14 சதவீதம் வரை சரிவடைந்தது.
இந்த விலை மாற்றத்தை முன்கூட்டியே கணித்தவர்கள் பெரும் அளவில் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க இலாபம் ஈட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இவ்வாறு வழக்கத்திற்கு மாறான வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் முக்கிய முடிவு குறித்த தகவல் முன்கூட்டியே சில வர்த்தகர்களுக்கு கசிந்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக