பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் "பொறுப்பற்ற நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாகக் கூறி, ஈரானியத் தூதர் சையத் அலி முசாஃபியை பிரித்தானிய வெளிவிவகார, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் அவசரமாக அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. பிரித்தானியாவின் பழமையான சினகோக் (Synagogue) உள்ளிட்ட முக்கிய இடங்களை உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் 40 வயது மற்றும் 22 வயதுடைய இரு நபர்கள் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெளிநாட்டு உளவு அமைப்பிற்கு உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஈரானின் பின்னணி குறித்து பிரித்தானியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்புத் திணைக்கள செயலாளர் ஜோன் ஹீலி விடுத்துள்ள அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலுள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியதை உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானிய மண்ணிலும் ஈரானின் தலையீடுகள் அதிகரித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உளவு நடவடிக்கைகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை முறையான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக