யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் தயாநிதி திலீபன் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், வடக்கு மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், விரிவுரையாளரின் மகளே பிரதான சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறைச்சாலையில் இருந்த அவர், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தந்தையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக அழைத்து வரப்பட்டார். ஒரு தந்தையை இழந்த மகளாக அவர் அழுதுகொண்டு சடலத்திற்கு அருகில் இருந்த காட்சிகள், இக்கொலைச் சம்பவத்தின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளன.
சமூகப் பொறுப்புடனும் சட்ட ரீதியாகவும் இச்சம்பவம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. "ஒரு மகளே தந்தையைக் கொலை செய்திருக்க முடியுமா?" என்ற ஆதங்கத்துடன் கூடிய கேள்விகள் எழுப்பப்படும் அதேவேளை, அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும், மரண வீட்டிற்கு வந்த அவர் நடந்துகொண்ட விதம் மற்றும் அங்கு நிலவிய சூழல் குறித்துப் புதிய சர்ச்சைகள் வெடித்துள்ளன. இக்கொலைக்கான பின்னணி என்ன? குடும்பத் தகராறா அல்லது வேறு ஏதேனும் திட்டமிட்ட சதி உள்ளதா என்பது குறித்து 'செய்திகளுக்கு அப்பால்' நிகழ்ச்சி விரிவாக ஆராய்ந்து வருகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக