BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

ஆட்பதிவுத் திணைக்களத்தில் கணினி கோளாறு: இன்று () பொதுச் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தில் கணினி கோளாறு: இன்று () பொதுச் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department for Registration of Persons) கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை (24) அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அடையாள அட்டை (NIC) வழங்கும் ஒரு நாள் சேவை உட்பட ஏனைய அனைத்துச் சேவைகளும் இன்று வழங்கப்பட மாட்டாது.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் எவரும் இன்று வருகை தர வேண்டாம் எனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் பிழையை உடனடியாகச் சரிசெய்து, வழமையான சேவைகளை மீண்டும் விரைவாகத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"