பாடசாலை மாணவர்களுக்கான அனைத்து பரீட்சைகளும் முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடைபெறும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு முன்னர் சுமார் நான்கு பாடசாலை நாட்கள் இழக்கப்பட்டிருந்தாலும், அது பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது என அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய வலுசக்தி கொள்கைகளுக்கு ஏற்ப கல்வித்துறை தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தாலும், தற்போதைய சூழ்நிலை பரீட்சைகளை ஒத்திவைக்கும் அளவுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகளில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும், தற்போதைக்கு அதே திட்டம் தொடரும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்காலத்தில் சூழ்நிலைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக