இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் எந்தவித தட்டுப்பாடும் தற்போது இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிருமித்தொற்று நீக்கிகள் மற்றும் இன்சுலின் உள்ளிட்ட சுமார் 15 வகையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் கூறினார்.
தற்போது உள்ள மருந்து கையிருப்புகள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு தேவையான அளவுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேவையெனில் பிற நாடுகளிலிருந்தும் இந்த மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், மருந்து தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக