ரஷ்யா தொடர்ந்து ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவ உளவுத்துறைத் தலைவர் ஒலெஹ் இவாஷ்சென்கோவுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர், தனது சமூக ஊடகப் பதிவில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ரஷ்யா தனது அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மின்னணு உளவு திறன்களை பயன்படுத்தி, மத்திய கிழக்கில் உள்ள தனது கூட்டாளிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளையும் இணைத்து, ஈரானுக்கு தகவல்களை பகிர்ந்து வருவதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையான ஒத்துழைப்பு மத்திய கிழக்கில் நிலவும் போர்நிலையை மேலும் நீட்டிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்பு மார்ச் 15 அன்று வழங்கிய ஒரு நேர்காணலில், ரஷ்யா ஈரானுக்கு ஷாஹெட் வகை மனிதர் இல்லா வானூர்திகளை வழங்கியுள்ளதாகவும், அவை அமெரிக்க தளங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
அத்துடன், ரஷ்யா ஈரானுடன் உளவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக