நாட்டில் நிலவி வரும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது.
கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவிப்பதாவது, ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூபாய் 175 அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதன்படி, தற்போது சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து ரூபாய் 2,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இதே நெருக்கடியின் தாக்கத்தால் மணல் மற்றும் கல் உள்ளிட்ட பிற கட்டுமானப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக