ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு நேற்றிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்துள்ளார்.
அவரை விமான நிலையத்தில் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ வரவேற்றார்.
மசாடோ காண்டா தனது வருகை இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான தருணத்தில் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொடர்பாடலை வலுப்படுத்துதல் மற்றும் முதலீடுகளை ஈர்க்குதல் மூலம் நாட்டின் மாற்றத்தை ஆதரிக்க வருவதாகவும், எதிர்வரும் சில நாட்களில் இவை தொடர்பான முன்னுரிமை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக