நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 5 T20 மற்றும் 3 ODI போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி நேற்றைய T20 போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் பின்னணியில், அணித்தலைவி அமெலியா கெர் (Amelia Kerr) சர்வதேச T20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்தார். கடந்த 10 தொடர்ச்சியான T20 போட்டிகளில் 30+ ஓட்டங்களை அடைந்த முதல் மகளிர் வீராங்கனையாக அமெலியா கெர் தன் பெயரை பதிவுசெய்துள்ளார்.
முன்னதாக, இலங்கையின் சமரி அதபத்து மற்றும் ருமேனியாவின் ரெபேக்கா பிளேக் ஆகியோர் 9 போட்டிகளில் 30+ ஓட்டங்களை எடுத்துள்ள சாதனையை வைத்திருந்தனர். ஆண்கள் T20 கிரிக்கெட்டில், ரோஹித் சர்மா, முகமது ரிஸ்வான், அபிஷேக் சர்மா மற்றும் ஹிரிஸ்டோ லாகோவ் போன்றோர் 7 போட்டிகளில் 30+ ஓட்டங்களை எடுத்துள்ளனர்.
அமெலியா கெர், இத்துடன் மட்டும் முடியாமல், ODI கிரிக்கெட்டில் இளவயதில் இரட்டை சதம் அடித்தவர் மற்றும் அதிகபட்ச ஓட்டங்களை குவித்த சாதனைகளை முன்னமே படைத்துள்ளார்.
இந்த 10 இன்னிங்ஸ்களில் கெர் 554 ஓட்டங்களை குவித்து, 142 என்ற ஸ்டிரைக் ரேட்டில் செயல்பட்டுள்ளார். அதே நேரத்தில், 6.74 என்ற எகானமி ரேட்டில் 12 விக்கெட்களை வீழ்த்தி, ஆல்-ரவுண்டர் திறனையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த சாதனை, T20 மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்றில் புதிய முன்மாதிரி அமைத்ததாக கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக