யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் 400 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து டீசலை கொள்வனவு செய்து, உழவு இயந்திரத்தின் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்து வந்தவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக