முகத்தில் பருக்கள் ஏற்பட்ட பின் உருவாகும் கரும்புள்ளிகள் மற்றும் சூரிய கதிர்வீச்சால் ஏற்படும் நிறமாற்றம் போன்றவை முகத்தின் அழகை பாதிக்கின்றன. இவ்வாறான பிரச்சினைகளை குறைத்து முகத்தை பொலிவாக மாற்ற இயற்கையான முறைகள் உதவியாக இருக்கின்றன.
இந்த நிலையில், எளிதாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஒரு முகமூடு மூலம் முகப்பருக்கள் காரணமாக ஏற்பட்ட கரும்புள்ளிகளை குறைத்து, சருமத்தை மென்மையாகவும் பிரகாசமாகவும் மாற்றலாம்.
இதற்காக பச்சை பாலும் மஞ்சள் தூளும் முக்கிய பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் பச்சை பாலும், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்க வேண்டும். பின்னர் பருத்தியை அந்த கலவையில் நனைத்து முகம் முழுவதும் சமமாக தடவ வேண்டும்.
அதை சுமார் இருபது நிமிடங்கள் வரை உலர விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு ஒரு அல்லது இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மெல்ல மெல்ல குறைந்து, சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற உதவும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக