ஈரானில் மூன்று வாரங்களாக நீடித்து வரும் போர் சூழ்நிலையால், Donald Trump கடும் அழுத்தத்திற்குள் சிக்கியுள்ளதாக முன்னாள் சி.ஐ.ஏ தலைவரும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருமான Leon Panetta தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், தற்போதைய ஈரான் நெருக்கடிக்கும், ஹார்முஸ் நீரிணை பிரச்சினைக்கும் ட்ரம்ப் முக்கிய காரணம் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப் தற்போது மிகவும் சிக்கலான சூழ்நிலையில் உள்ளார் என்றும், இந்த நிலைக்கு அவர் எடுத்த முடிவுகளே காரணம் என்றும் பனேட்டா சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பத்தில் இந்த போர் விரைவாக முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டதாகவும், அது “ஒரே அடியில் முடியும் தாக்குதல்” என கருதப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மோதல் நீடித்துவருவதால் அந்த எதிர்பார்ப்பு முறியடிக்கப்பட்டுள்ளது. Ali Khamenei உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அவரது மகன் மொஜ்தபா கமெனீ பதவியேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் பல அமெரிக்க படைவீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதுடன், ட்ரம்பின் அரசியல் ஆதரவும் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் உள்நாட்டில் போரை தொடர்ந்து முன்னெடுப்பதும் அவருக்கு சவாலாக மாறியுள்ளதாக பனேட்டா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த நிலைமை அமெரிக்காவிலிருந்து உலகத்திற்கு பலவீனமான செய்தியை அனுப்புகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக