யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தின் முகப்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலி, ஆலயத்தை பார்வையிட வரும் அடியவர்கள் இடையூறின்றி வணங்குவதற்கும், ஆலய வளாகத்தில் வாகனங்கள் நெரிசலை ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகின்றது.
மேலும், வழிபாடுகள் தவிர்ந்த தேவையற்ற செயல்பாடுகளை தவிர்ப்பதற்கும், ஆலயத்தின் புனித தன்மையை பேணுவதற்கும் இந்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகப்பில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள வேலி மூலம் அடியவர்கள் வசதியாக சன்னிதியான் அருகில் செல்ல முடியும், ஆனால் ஆலய வளாகத்தில் வாகன இறக்க முடியாத ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக