பிரித்தானியா தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து, இந்தியா, இலங்கை உட்பட 31 நாடுகள் தொடர்பில் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அத்தியாவசிய தேவையில்லாத பயணங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செய்ய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல், வான்வெளி மூடல், விமான தாமதம் மற்றும் ரத்து போன்ற இடையூறுகள் பயண திட்டங்களை பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக