இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை சீராக இயங்குவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் திடீரென அதிகரித்து வருகின்றன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கான நிலவரப்படி, மொத்தம் 5,603,104 பேர் இந்த முறைமையில் தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. ஒரே நாளில் 503,236 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைகள்: மார்ச் 15 – 42,899, மார்ச் 16 – 337,068, மார்ச் 17 – 395,349, மார்ச் 18 – 301,463.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, ஆரம்பத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்த போதிலும், தற்போதைய நிலையில் முறைமை எவ்விதத் தடங்கலுமின்றி செயல்பட்டு வருவதாக உறுதி செய்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக