நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள World’s End பகுதியில் நேற்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 மாணவர்களைக் கொண்ட குழு சுற்றுலாவிற்காக அந்த பகுதியில் சென்றிருந்தது.
அப்போது, 23 வயதுடைய மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி பள்ளத்தாக்கிற்குள் சரிந்து விழுந்துள்ளார்.
நுவரெலியாவைச் சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ், “பொடி மல்லி” என அறியப்படும் அவர், தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து உடனடியாக பள்ளத்தாக்கிற்குள் இறங்கி மாணவியை தாங்கிப் பிடித்தார். சுமார் ஒரு மணித்தியாலம் மாணவியை பாதுகாப்பாக பிடித்து காத்திருப்பதன் பின், மீட்பு குழுவின் உதவியுடன் மாணவி மேலே கொண்டு வரப்பட்டார்.
இந்த துணிச்சலான மற்றும் பொறுப்பான செயலுக்காக, பிரான்சிஸுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக