நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கிடையில், சட்டவிரோதமாக எரிபொருளைக் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த ஒருவரை, 65 லீட்டர் பெட்ரோலை லொறியில் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கண்டுபிடித்து, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத் தண்டனையும் 2500 ரூபா அபராதத்தையும் விதித்துள்ளார்.
வெல்லவத்தை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து எரிபொருள் கேன்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. பொலிஸார் அந்த நபரை பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் கைது செய்து, லொறியில் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு பெட்ரோல் கேன்களை கண்டுபிடித்தனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக