நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
வங்கி சேவைகள் அத்தியாவசிய சேவையாக கருதி, வாரத்தின் ஐந்து நாட்களும் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
திங்கள் முதல் வெள்ளி வரை வங்கிகள் இயங்கும் நிலையில், புதன்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வங்கிச் சேவைகள் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் வாரத்தின் ஐந்து நாட்களிலும் தடை இல்லாமல் வங்கிச் சேவைகளை பயன்படுத்த முடியும்.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்க, வாடிக்கையாளர்கள் அதிக அளவில் டிஜிட்டல் வங்கி முறைகளை பயன்படுத்த முன்மொழியப்பட்டு, இணைய வழிகள் மற்றும் டிஜிட்டல் முறைகளில் வங்கி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க பொதுமக்களிடம் இலங்கை மத்திய வங்கி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக