வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு British Airways இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி முதல், லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.
இந்த சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை நேற்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையிலிருந்து லண்டன் நோக்கி நேரடி விமான சேவைகளை வழங்கி வரும் ஒரே விமான சேவையாக SriLankan Airlines நிறுவனம் மட்டுமே காணப்படுகிறது.
மொத்தத்தில், இந்த புதிய சேவை ஆரம்பம் இலங்கை – இங்கிலாந்து இடையேயான பயண வசதிகளை மேம்படுத்துவதுடன், சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகளுக்கும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக