கட்டுநாயக்க மற்றும் துபாய் இடையிலான விமான சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக SriLankan Airlines நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, மார்ச் 17, 18, 21 மற்றும் 24 ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து துபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்பு திரும்பும் UL232 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமான ரத்துகளால் பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளுக்காக நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகள் தங்களது பயண முகவர்கள் அல்லது அருகிலுள்ள SriLankan Airlines அலுவலகங்களை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடும் முன் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் விமான சேவைகளின் தற்போதைய நிலையை சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக