யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியை அண்மித்த இடத்தில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் மற்றும் அவரது 19 வயது சகோதரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக