மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் தனது ஆகக்கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் "கற்பனைக்கு எட்டாத" அளவிலான பதிலடி கொடுக்கப்படும் என்றும், அண்டை நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் தமது இலக்குகளில் அடங்கும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்தச் சர்வதேச நெருக்கடியால் இலங்கையில் எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நேற்று (மார்ச் 15) கொழும்பில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு அமைச்சக செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்டனர். மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்தால் நாட்டின் பொதுச் சேவைகள் முடங்காமல் இருப்பதை உறுதிசெய்வது குறித்தும், குறிப்பாகக் கல்வி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் எரிபொருள் பயன்பாட்டைச் சீரமைப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக