பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வீதியில் இன்று காலை பதிவான வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீதியைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணையில், உயிரிழந்தவர் மடபாத (Madapatha) பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக லொறி சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதசாரிகள் வீதியைக் கடக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சாரதிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக