திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தோப்பூர் 6-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்தபோது, வேகம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் படுகாயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான நீதிவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிக வேகம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்ததே விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக