எரிபொருள் விலை உயர்வினால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்ற கவலை பொதுமக்களுக்கு தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது மின்சார உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள நாட்டில் போதுமான அளவு எரிபொருள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மின்வெட்டு விதிப்பதற்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப மின் உற்பத்தியை ஆதரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலம் போதுமான அளவு டீசல் மற்றும் உலை எண்ணெய் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, மாற்று எரிசக்தி மூலங்களின் ஆதரவால் மின்சார உற்பத்தி நிலைமை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பதுடன், சூரிய சக்தியும் தேசிய மின்கட்டமைப்பிற்கு முக்கிய பங்களிப்பு வழங்கி வருகிறது.
எனினும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்காலத்தில் மழைப்பொழிவு குறைந்தால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக