BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மஞ்சள் போர்வை போர்த்திய நுவரெலியா பூத்துக் குலுங்கும் இலவு மரங்கள்

மஞ்சள் போர்வை போர்த்திய நுவரெலியா பூத்துக் குலுங்கும் இலவு மரங்கள்

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள புஸ்ஸல்லாவ பகுதியில் தற்போது மஞ்சள் இலவு மரங்கள் பூத்துக் குலுங்கி அழகிய காட்சியை வழங்கி வருகின்றன.

இந்த இயற்கை அழகைக் காண நாள்தோறும் பலர் அந்தப் பகுதிக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஞ்சள் இலவு மரம் என்பது கோடைக்காலத்தில் இலைகள் இல்லாமல், மரக்கிளைகள் முழுவதும் பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காணப்படும் அழகிய மரமாகும்.

இந்த மரம் பிக்சேசி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பூக்கள் பெரியதாகவும் மென்மையான மஞ்சள் நிற இதழ்களுடனும் காணப்படுவதுடன், அதன் நடுப்பகுதியில் பல மகரந்தக் கம்பிகள் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்கள் வரை இந்த மரங்கள் அதிகமாக பூக்கும். இலைகள் உதிர்ந்த பின் மரம் முழுவதும் பூக்களால் மூடப்பட்டு மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும்.

இந்த மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டதுடன் செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரக்கூடியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த மரத்தின் பல பகுதிகள் மருத்துவ மூலிகைகளாக பயன்படுத்தப்படுவதுடன், அழகு மரமாகவும் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது.

பூக்கள் மலர்ந்த இந்த காலத்தில் நுவரெலியா பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்து இயற்கை அழகை ரசிக்க வரும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"