BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ட்ரோன் தாக்குதல் அச்சம் துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தம்

ட்ரோன் தாக்குதல் அச்சம் துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தம்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தாக்குதலால் கடுமையான தீப்பரவல் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் தாங்கள் பயணிக்கவிருந்த விமானங்கள் மற்றும் பயண விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள தொடர்புடைய விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"