துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதலால் கடுமையான தீப்பரவல் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் தாங்கள் பயணிக்கவிருந்த விமானங்கள் மற்றும் பயண விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள தொடர்புடைய விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக