திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர், 20,000 ரூபா இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறையீட்டின் அடிப்படையில், இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக