உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பற்றாக்குறையைத் தொடர்ந்து, சந்தையில் மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாய் வரை அதிகரிக்க வணிகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பற்றாக்குறையின் தாக்கத்தால் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையும் ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலம் நெருங்கி வருவதால், எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வணிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது சந்தையில் மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் குறைவாக உள்ளதாக சிலர் கருதினாலும், நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டால் அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்கள் நாட்டிற்கு நான்கு முக்கிய நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக