BREAKING
தலவத்துகொட உணவகத்தில் அதிகாலை திடீர் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு – எரிவாயு கசிவு காரணமா என விசாரணை வைரலாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பதிவு: ஸ்டாலின், கொளத்தூர் குறித்து பரபரப்பு கருத்து மரண அச்சம்? புடின் மகள்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு: பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு 5 நாட்களில் ரூ.265 கோடி வசூல் வேட்டை செய்த ராம் சரண் ‘பெத்தி’ திரைப்படம்: பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனை 12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது! தலவத்துகொட உணவகத்தில் அதிகாலை திடீர் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு – எரிவாயு கசிவு காரணமா என விசாரணை வைரலாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பதிவு: ஸ்டாலின், கொளத்தூர் குறித்து பரபரப்பு கருத்து மரண அச்சம்? புடின் மகள்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு: பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு 5 நாட்களில் ரூ.265 கோடி வசூல் வேட்டை செய்த ராம் சரண் ‘பெத்தி’ திரைப்படம்: பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனை 12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது!

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் ஆம் திகதி ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (12) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, புதைகுழியை சுற்றியுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கும் பொருட்களை வைப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் கடந்த டித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவற்றை அகற்றி புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளை முன்புபோல் நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதைகுழி பகுதியில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரணவன், சட்டத்தரணிகள் நிரஞ்சன் மற்றும் ரணித்தா உள்ளிட்டோர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அந்த நேரத்தில் புதைகுழி பகுதியில் இன்னும் நீர் தேங்கி இருப்பது கவனிக்கப்பட்டதால், எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பில் அந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கு ஏப்ரல் 08ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதுடன், அதன் பின்னர் ஏப்ரல் 20ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"