BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீதிமன்ற விசாரணைகள் நிறைவு: பாரியளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற விசாரணைகள் நிறைவு: பாரியளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று தீயிட்டு அழிப்பு!
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று (13.03.2026) காலை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி, 40 கிலோகிராம் 533 கிராம் ஹெரோயின், 132 கிலோகிராம் 79 கிராம் கஞ்சா, 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள் இவ்வாறு தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.

 போதைப்பொருள் கையிருப்பு இன்று அதிகாலை 6.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம், வன்னதவில்லுவ - லெப்டோவத்த பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நிறுவப்பட்டுள்ள நவீன தகன உலை மூலம் இன்று காலை 9.00 மணியளவில் இவை அனைத்தும் முழுமையாக அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"