பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று (13.03.2026) காலை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி, 40 கிலோகிராம் 533 கிராம் ஹெரோயின், 132 கிலோகிராம் 79 கிராம் கஞ்சா, 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள் இவ்வாறு தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.
போதைப்பொருள் கையிருப்பு இன்று அதிகாலை 6.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம், வன்னதவில்லுவ - லெப்டோவத்த பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நிறுவப்பட்டுள்ள நவீன தகன உலை மூலம் இன்று காலை 9.00 மணியளவில் இவை அனைத்தும் முழுமையாக அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக