மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் KC-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாகவும், அதனுடன் சென்ற மற்றொரு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது நட்பு நாட்டுப் படைகளின் தவறான இலக்கோ அல்ல என்றும், ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்தாகவே கருதப்படுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே குவைத் படைகள் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று F-15E ரக போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது விபத்துக்குள்ளான KC-135 விமானத்தையும் சேர்த்து அமெரிக்கா இந்தப் போரில் இதுவரை 4 விமானங்களை இழந்துள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வான்வழி எரிபொருள் நிரப்பும் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தகைய பெரிய ரக விமானத்தின் இழப்பு, அமெரிக்க வான்படையின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளில் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக